Sakkraviyugam

April 16, 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கே.சுப்பராயன் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் நேரில் சந்திப்பு

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை,

திருப்பூர் மாநகர் 55 வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் பட்டா வழங்குவது,

திருப்பூர் மாநகர் 55 வது வார்டு பெரிச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் 124 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது,

திருப்பூர் மாவட்டம் தொட்டிபாளையம் கிராமம் அண்ணா காலனியில், 30 வருட காலமாக உள் வாடகைதாரர்களாக குடியிருந்து வருபவர்களுக்கு, அதே விலையில் அவர்களுக்கு வீட்டை உரிமையாக்கி கொள்வது குறித்தும்,

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் நஞ்சராயன் குளத்தை தனியார் வசமிடமிருந்து பாதுகாக்க கோரும் அவசர முறையீடு குறித்தும்,

கோவை திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும்,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் வாழ்ந்து, மறைந்த தேசபக்தர் லட்சுமணய்யர் அவர்களுக்கு முழு உருவ வெண்கல சிலையும், மணிமண்டபம் அமைக்க கோரும் முறையீடு,

தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 16,000 தொகுப்பூதியம் வழங்க கோரும்,

கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கியுள்ளார். மேற்படி மாண்புமிகு முதல்வர் அவர்களும் இக்கோரிக்கையில் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து உள்ளார்.

Scroll to Top