Sakkraviyugam

July 27, 2026

நாடு முழுவதும் எட்டு வாரங்களுக்குள் தெரு நாய்களை பிடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தெரு நாய்கள் பிடிப்பதைத் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது, இந்த நாய்கள் பொதுமக்களை கடித்து விடுகிறது. நாய்களுக்கு தடுப்பூசி உள்ளிட்டவை செலுத்தாததால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் எட்டு வாரங்களுக்குள் தெருநாய்களை பிடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Scroll to Top