திருப்பூர் நல்லூர் காவல் நிலையம் சார்பில் போதைப் பொருட்களால் வரும் தீமைகள் குறித்து, நல்லூர் காவல் நிலைய உதவி ஆணையாளர் தையல் நாயகி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி மாணவர்கட்கு, போதை பொருட்களாள் வரும் தீமைகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நாடகங்கள், நடனங்கள் கோவில் வழி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. உடன் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.