தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகாத்மா காந்தி அடிகளின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு
02.10.2025 காலை 10 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி முன்பாக அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி அடிகளின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் நமது கலை இலக்கிய பெருமன்றத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி மாவட்டத் தலைவர் பி.ஆர்.நடராசன், மாவட்ட செயலாளர் ஏவி பழனிச்சாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
